வகுப்பு : பத்தாம் - மாதிரித்தேர்வு - 1 - ஜனவரி 2023.



    கோலப்பெருமாள்    செட்டி  வைவ  நடுவண்  மேனிலைப்பள்ளி ,

          எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு , 

 அரும்பாக்கம் ,  சென்னை - 600106.

----------------------------------------------------------------------------------------------------------------


                                   மாதிரித்தேர்வு - 1 - ஜனவரி 2023.

 வகுப்பு : பத்தாம்           தமிழ்த்தேர்வு                  மதிப்பெண் : 80.

          13.01.2023                                                                   கால அளவு ;  3 மணி . 

 பகுதி  - அ 

1. அ )   பின்வரும்  பத்தியைப் படித்துப்  பொருள் உணர்ந்து  தொடர்ந்து  வரும் பல்வுள்  தெரிவு வினாக்களுக்கு  ஏற்ற விடைகளை  எழுதுக.                                                                    5*1 = 5.


ஆபிரகாம் பண்டிதர் 1874 ஆம் ஆண்டு  திண்டுக்கல் நார்மல் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து முதன்மை மாணவராகத் தேர்ச்சி பெற்றார். ஆபிரஹாமின் தனித்  திறமையை அறிந்த முதல்வர் யார்க் துரை  அவர்கள் வெகுவாகப் பாராட்டினார் . தமது மாதிரிப் பள்ளியின் ஆசிரியராக அவரை நியமித்தார்.   ஆபிரகாம் பண்டிதர் பள்ளியின் வகுப்பறையில் பாடங்களை நேரடியாக நடத்தாமல் , கதைகளின் ஊடாகவே நடத்துவார். ஏதன் காரணமாக அவரைக் கதை வாத்தியார் என்று பெயரிட்டு  அழைத்தனர். திண்டுக்கல்லில் புகழ்பெற்ற வயலின் வித்வான் சடையாண்டிப் பண்டிதரிடம் இசையை முறையைக் கற்றுக்  கொண்டார் .ஐரோப்பிய இசை வல்லுனரான யார்க் துரை மேற்கத்திய இசையினையும் கற்றுக்கொண்டார். இசைத்துறையில் இருந்து கொண்டே சித்த மருத்துவமும் கற்றுக்கொள்ள விரும்பினார். சுருளிமலை கருணானந்த முனிவரிடம் சென்று பல்வேறு நோய்களை நீக்கும் மருந்துகளைத் தயாரிக்கும் முறைகளைக் கற்றுக்கொண்டார். 1882 இல் ஞானவடிவு பொன்னம்மாள் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் தஞ்சையில் உள்ள சீமாட்டி நேப்பியர் பெண்கள் பள்ளியில்  பணியாற்றினார்.

வினாக்கள்: 

1. ஆபிரகாம் பண்டிதருக்கு வழங்கப்பட்ட  சிறப்புப் பெயருக்கான  காரணம் யாது  ?

அ ) முதன்மை மாணவர் என்பதால்.  ஆ)  சித்த மருத்துவம் பார்த்ததால்    இ) வள்ளல் தன்மையால்    ஈ) பாடங்களைக் கதையோடு கற்பித்ததால்.  

2. ஆசிரியராக நியமித்ததவர் யார்  ?

அ ) ஞானவடிவு  ஆ) பொன்னம்மாள்    இ)யார்க் துரை    ஈ) இசைஞானி   

3. ஆபிரகாம் , சடையாண்டிப் பண்டிதரிடம் கற்றது என்ன ?

அ) வயலின்    ஆ) மிருதங்கம்       இ) பாட்டு    ஈ) இசை 

4. கருணானந்த முனிவர்  எதில் சிறந்து விளங்கினார்.?

அ) சித்த மருத்துவம்  ஆ) யோகா     இ) வில்வித்தை    ஈ)வேட்டை    

5. கணவனும் மனைவியும் எங்கு பணியாற்றினர் ?

அ) தஞ்சை   ஆ)சீமாட்டி நேப்பியர் பெண்கள் பள்ளி   இ) திருச்சி      ஈ)ஈரோடு

( அல்லது ) 


ஆ )  பின்வரும்  பத்தியைப் படித்துப்  பொருள் உணர்ந்து  தொடர்ந்து  வரும் பல்வுள்  தெரிவு வினாக்களுக்கு  ஏற்ற விடைகளை  எழுதுக.                                                            5*1 = 5.

 

 மரங்கள் நமது  சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் அரணாக உள்ளன. மரங்கள்தான் மண்  வளத்தைப்  பேணிப் பாதுகாக்கின்றன. மரங்கள் பகற்பொழுதில்  உயிர்க்காற்றை நமக்குத் தருகின்றன. புவியின் வெப்பத்தைத்  தணிக்க உதவுகின்றன. ஆனால், மனிதர் சுயநலத்திற்காக மரங்களை வெட்டி அதிலிருந்து காகிதம்,  இரப்பர் , கோந்து, மேஜை நாற்காலி போன்றவற்றைச்  செய்து விற்கின்றனர். மரங்கள் அழிவதால் மனிதகுளம் பெரும்சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். இந்தியாவில்     60% மரங்கள் இருக்க வேண்டும். ஆனால்,  அது நாளும் குறைந்து வருக்கின்றது. அசோகா சக்கரவர்த்தி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மரங்களின் பெருமையை உணர்ந்து, சாலையின் இரு மருங்கிலும் எண்ணற்ற மரங்களை நட்டார். எனவே, மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். மனிதர்களுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து உயிர்களுக்கும் அரணாக உள்ளது. மரங்கள் மருத்துவக்குணம் வாய்ந்தவை. 

வினாக்கள் :

1.  சுற்றுச்சூழலினைப் பாதுகாக்கும் அரண் எது  ?

அ) அரசன் ஆ) மக்கள்     இ) மரங்கள்    ஈ) காவலர்கள் 

2. மரங்களிலிருந்து  தயாரிக்கப்படுவது எது   ?

அ) ஆணி   ஆ)  மண்வெட்டி   இ) காகிதம், ரப்பர்  ஈ) தகரப்பெட்டி 

3.  சாலைகளின் ஓரங்களில் மரங்களை நட்டவர் யார்  ?

அ ) சோழன்     ஆ) அசோகர்  இ) பல்லவர்கள்       ஈ)  பாண்டியர்கள் 

4.  மரங்களின் தனிக்குணம்  எது  ?

அ)  மருத்துவக்குணம்      ஆ)  கூழாக்குவது     இ)  காற்றைத்தடுப்பது. 

           ஈ) பொருளாவது.

          5. மரங்கள் அழிவதால் எத்தகைய சூழல் உருவாகும்   ? 

அ ) நல்ல காற்று    ஆ) துன்பம்     இ) பெரும்சவால்கள்      ஈ) கதவு. 

 

 2.  அ ) பின்வரும்  உரைநடைப் பத்தியைப் படித்துப்  பொருள் உணர்ந்து  தொடர்ந்து  வரும் பலவுள்  தெரிவு வினாக்களுக்கு  ஏற்ற விடைகளை  எழுதுக                                                                 5*1 = 5.

அறிவினைத்துலங்க  வைக்கும்  பல கருவிகளுள் நூல் நிலையமும் ஒன்றாகும். கணக்கற்ற அறிஞர்கள் தங்கள்  எண்ணங்களை, கண்டுபிடுப்புகளை ,  நூல்களாக எழுதி உள்ளனர். அந்த நூல்களை எல்லாம் முறையாகவும் , வரிசையாகவும்,  அழகாகவும் அடுக்கி வைத்துப்பயன்படுத்தும் ஓர்  இடமே நூலகமாகும். நூல் நிலையத்தில் பலவகையான நூல்கள் இருக்கும். அவை  இலக்கியம், இலக்கணம், வரலாறு, அறிவியல், புவியியல், உயிரியல், கணினியியல், கதை, கட்டுரை, புதினம், அகராதி, கலைக்களஞ்சியம்  மற்றும் திறனாய்வு நூல்கள் எனப் பல்வேறு பொருள்களைப்பற்றிய நூல்கள் இடம்பெற்றிருக்கும்.  அதனை வாங்கிப் படிக்க முடியாதவர்கள், நூல் நிலையத்தில் வந்து படித்துப் பயன் பெறலாம். நூல்நிலையத்தில் பள்ளி நூலகம், கல்லூரி நூலகம், பல்கலைக்கழக  நூலகம், குழந்தைகள் நூலகம், அரசுப் பொதுநூலகம், நடமாடும் நூலாகும், நூல்களை வாடகைக்கு விடும் நூலகம் எனப்பல வகைகள் உள்ளன. நூல் நிலையங்கள் மாணவர்களின் அறிவை வளர்த்துக்கொள்ளப்  பெரிதும் பயன்படுகின்றன. மாணவர்கள் நூல்கள்  படிக்கும் பழக்கத்தை  வளர்த்துக்கொள்ள வேண்டும்.  கண்டது கற்றால்  பண்டிதன் ஆகலாம்  என்பதை உணர்ந்து நூலகம் சென்று பயனடைவோம் .

வினாக்கள்: 

1. அறிவினைத் துலங்கச்செய்யும் கருவி எது?

அ ) நூல் நிலையம்   ஆ) அஞ்சல் நிலையம்    இ) கல்விநிலையம்  ஈ) அறநிலையம்  

2. நூல்கள் அழகாகவும், வரிசையாகவும் வைக்கப்பட்டிருக்கும்  இடம் எது?

அ )  கல்லூரி ஆ) நடமாடும் வண்டி   இ) நூலகம்   ஈ) பள்ளி  

3. நூல்கள் எவற்றை வளர்க்க உதவும் ?

அ)  செடிகளை   ஆ) மனதை     இ) திறமை   ஈ) அறிவை   

4. கண்டத்தைக்  கற்றவன் ----------- ஆவான்.

அ )  பண்டிதன்          ஆ)  அறிவாளி  இ) அறிவொளி   ஈ) விஞ்ஞானி  

5. மாணவர்களுக்கான சிறந்த பழக்கம் எது..?

அ ) உண்ணும்  பழக்கம்  ஆ)  படிக்கும் பழக்கம்  இ)  உறங்கும் பழக்கம்   ஈ) எழுதும் பழக்கம்

                                                                    ( அல்லது ) 

ஆ )
பின்வரும்  பத்தியைப் படித்துப்  பொருள் உணர்ந்து  தொடர்ந்து  வரும் பல்வுள்  தெரிவு வினாக்களுக்கு  ஏற்ற விடைகளை  எழுதுக.                                                            5*1 = 5.

ஒருவரின் சீரான மனநிலைக்கு  மிகவும் உதவியாய் இருக்கும் உயர்ந்தகலை ஓவியக்கலையே. ஓவியம்  வரைபவர்களும் , அதனை பார்ப்பவர்களும் அத்தகு மனநிலை  கொண்டவர்களாகவே இருப்பர். மனக்கவலை போக்கும் மௌனக்கலையே ஓவியக்கலை. கோவில் விழாக்காலங்களில் அல்லது தினம் நடக்கும் பூஜைக் காலங்களிலும் இசைச் சத்தம் அதிகமாக்கக்  கேட்பதுண்டு. அது ஆனந்தம் அளித்தாலும்  ஒருநிலையில் மனம் அமைதியையே நடுவதை நாம் உணர்த்திருப்போம். அப்படி நாம் திருக்கோயில்களை வலம்வரும்போது  ஓவியங்களைக் கண்டு மகிழ்ந்திருப்போம். கோயில் என்பது மனம் விரும்பும் இடமாக மட்டுமின்றி ஆன்மிகம் வளர்த்து, மக்கள்  மனதைப்  பண்படுத்தும் இடமாகவும் இருந்து வருவதை நாம் அறிவோம். மிகச் சிறப்பான பண்டைய தமிழ் ஓவியக்கலையைக்  கஞ்சிகைலாயநாதர் கோயிலில் காணலாம் . நாயக்கர்கள் கால ஓவியங்களை மதுரை மற்றும் பல்வேறு கோயில்களில்  காண முடியும்.  

 வினாக்கள்: 

1. ஆனந்தம் அளிப்பது எது  ?

அ )இசை     ஆ)பாட்டு      இ)யாழிசை    ஈ)  குழலிசை 

2. நல்ல மனநிலைக்கு உதவும் கலை  ?

அ)சிற்பக்கலை  ஆ)ஆடற்கலை  இ)ஓவியக்கலை     ஈ)பாடற்கலை   

3. மனதைப்  பண்படுத்தும் இடமாக இருப்பது எது?

அ) வயல்     ஆ) வீடு      இ) நாடு     ஈ)கோயில்   

4.  பண்டைய தமிழ் ஓவியங்கள் காணப்படும்  கோயில்  எது ?

அ )கஞ்சிகைலாயநாதர் கோயில்  ஆ) திருநெல்வேலி     இ)பரமக்குடி     ஈ) மாமல்லபுரம்.   

5.மதுரையில் காணப்படும் ஓவியங்கள் எக்காலத்தது ?

அ)பாண்டியர்    ஆ)நாயக்கர்    இ)சேரர்     ஈ)சோழர்  


                                                            இலக்கணம் 

3. .சான்று தருக  ( எவையேனும்  நான்கு மட்டும் )                   4*1 = 4.

1. உயிரபெடை

          அ) தீதொரீஇ   ஆ)  மருண்ண்ம்  இ) இங்ஙனம்  ஈ)   திகழொளி.     

 2. எழுவாய்த்தொடர்    

அ) நண்பா எழுது  ஆ) கேட்ட பாடல்  இ) இனியன் கவிஞர் 

 ஈ)  மற்றொன்று 

 

3.    படர்க்கை ஒருமைப்பெயர்  

அ ) நான்,யான்    ஆ)அவன், அவர்கள் 

இ) யாம் , நாம்     ஈ) நீ, நீவீர் .

 

 4.    கொடை வினா  

         அ )சிங்கப்பூருக்குச் செல்வாயா.?

         ஆ) திருக்குறளை எழுதியவர் யார் ? 

        இ)  புதுக்கோட்டைக்கு வழி எது? 

        ஈ) உன்னிடம் பேனா இருக்கிறதா?. 


5.   எழுவாய்த்தொடர் 

         அ) வந்த கந்தன்     ஆ)வா கந்தா    இ)கந்தன்  வந்தான் 

        ஈ) வருகின்றான் கந்தன்    . 


 4.  நிரப்புக   ( எவையேனும் நான்கு மட்டும் )                        4*1 = 4.


1. இ-கரம் அல்லது இ  எனும் எழுத்தில் முடியும் அளபெடை------------.

அ ) ஒற்றளபெடை   ஆ) உயிரளபெடை   இ) சொல்லிசையளபெடை    ஈ) இன்னிசையளபெடை.

    

2.   ஓர்  ஆண்டின் கூறுகள்  ---------------  எனப்படும்.

அ )  கார்காலம்  ஆ) சிறுபொழுதுகள்  இ) பெரும்பொழுதுகள் 

  ஈ) மாதங்கள்.


3.    தொகா நிலைத்தொடர் ----------- வகைப்படும்.

அ ) ஆறு  ஆ) ஏழு   இ) எட்டு   ஈ) ஒன்பது.

 

4.    செய்யுளில்  சொற்களைப்  பொருளுக்கு ஏற்றவாறு  சேர்த்தோ மாற்றியோ பொருள்கொள்ளும் முறைக்குப்  ---------------- என்று பெயர் .

அ ) பொருள்கோள்   ஆ) செய்யுள்நிலை    இ) விளக்கநிலை    ஈ) பொருள்கொள்ளுதல் . 


   5. மருத நிலம் என்பது -------------- ஆகும்.

அ ) மழையும் மலை சார்ந்த நிலமும் 

 ஆ) கடலும் கடல் சார்ந்தநிலமும் 

  இ) வயலும் வயல் சார்ந்த நிலமும்.

 ஈ) மணலும் மணல் சார்ந்த இடமும்.

  

5. கூறிவாறு  செய்க   ( எவையேனும் நான்கு   மட்டும் )        4*1 = 4.


1. மலர் மலர்ந்தது  (  எவ்வகைத் தொடர்  )

அ )தனிமொழி    ஆ) பொதுமொழி   இ) தொடர்மொழி    

ஈ) கிளவி.

   

2. செங்கதிரோன்   (  இதில் உள்ள பண்புத்தொகை வகையை எழுது  )

அ ) அளவு   ஆ) வடிவம்    இ)வண்ணம்    ஈ) சுவை  .  

  

3. வண்டி  -  வினைத்தொகை ஆக்குக.

அ) மாட்டு வண்டி   ஆ) வில் வண்டி      இ) கட்டை வண்டி     ஈ)தள்ளு வண்டி  .

   

4.  சலசலத்தது  (  சொல்வகையை எழுதுக   )

அ) இரட்டைக்கிளவி   ஆ) அடுக்குத்தொடர்  இ) உணர்ச்சித்தொடர் ஈ)உரிச்சொல்தொடர்  .

 

 5. ஆலத்து மேல குவளை குளத்துல 

       வாலின் நெடிய குரங்கு ----( பொருள்கோள் வகை )

அ ) கொண்டு கூட்டுப்பொருள்கொள்   

ஆ) நிரல் நிறைப்பொருள்கொள்   

இ) ஆற்றுநீர்ப்பொருள்கோள் 

  ஈ) மொழிமாற்றுப்பொருள்கொள்

.


6. இலக்கணக்குறிப்புத்  தருக   ( எவையேனும் நான்கு மட்டும் )                          4*1 = 4.

1. பலகை 

அ) பொதுமொழி        ஆ) தனிமொழி  இ) தொடர்மொழி  ஈ)பகுபதம் .   

        2. இங்கு பேருந்து வருமா ? 

அ ) ஏவல் வினா.  ஆ) அறியா வினா.    இ) அறிவினா   

 ஈ) ஐய வினா .   

        3.  நிலமும் பொழுதும் 

அ ) உரிப்பொருள்   ஆ) கருப்பொருள்    இ) முதற்பொருள் 

ஈ)   அடிப்படைப்பொருள்.

                 4. கைக்கிளை , பெருந்திணை 

            அ ) பொருந்தாத்திணை ஆ)அகத்திணை     இ) புறத்திணை  

                ஈ) அகப்புறத்திணை.

               5.    கத்தும் குயிலோசை  - சற்றே வந்து 

                       கதிர் படவேணும்..  

அ ) காலவழு    ஆ) பால்வழு    இ) திணைவழு     ஈ) மரபு வழுவமைதி  .                                                                           

                                                    

7. பின்வரும்  கோடிட்ட இடங்களை நிரப்புக.                  4*1 = 4.

    1.  பொருளல் லவரைப்  ------------------ செய்யும் 

                பொருளல்ல   தில்லை பொருள். 

              அ)  பொருளாகச் ஆ) மருளாகச்     இ) இருளாகச்   

                ஈ) தெளிவாகச் 

            2.  --------------------------- பாடற்  கியைபின்றேல் : கண் என்னாம் 

                காண்ணோட்டம்  இல்லாத கண்.

               அ )  மண்ணென்னாம்  ஆ) எண்ணென்னாம்   

                இ)  புண்ணென்னாம்  ஈ) பண்ணென்னாம்  

 

            3. அருமை உடைத்தன் றசாவாமை  வேண்டும் 

            பெருமை ---------- தரும்.  

            அ) பயிற்சி  ஆ) உயர்ச்சி     இ)முயற்சி    ஈ) சுழற்சி 


         4. குற்றம் இலானாய்க்  குடிசெய்து வாழ்வானைச் 

            சுற்றமாச் -------- உலகு .

           அ)சுற்றும்  ஆ) சாற்றும்    இ) சாரும்     ஈ) செய்யும் 


பகுதி - ஆ 

8. பின்வரும்  செய்யுள் பகுதியைப்  படித்துப்  பொருள்                     உணர்ந்து,  தொடர்ந்து  வரும் பலவுள்  தெரிவு வினாக்களுக்கு  ஏற்ற விடைகளை  எழுதுக.                                                                  5*1 = 5.


ஆழ நெடுந்திரை யாறு கடந்திவர்  போவாரோ 

வேழ நெடும்படை கண்டு நடுங்கிடும்   வில்லாலோ 

தோழமை என்றவர் சொல்லிய சொல்லரு  சொல் லன்றோ ஏழைமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ.. ( 2317)

 

  1. இப்பாடலின்  ஆசிரியர் யார் ?

அ ) ஒளவையார்     ஆ) கபிலர் 
இ)  இளங்கோவடிகள்     ஈ)கம்பர்  

  2. பாடல் இடம்பெற்ற  நூல் எது ?

அ) நாலடியார்  ஆ)நன்னெறி    இ)கம்பராமாயணம்   ஈ)நறுந்தொகை   

 3. பாடல் யார் கூற்றாக அமைந்துள்ளது   ?

அ)அனுமன்    ஆ) குகன்   இ)இராமன்     ஈ)சீதை 

 4.  ஆழ நெடுந்திரை - என்று அழைக்கப்படும் நதி எது?

அ)கங்கை  ஆ) யமுனா   இ) காவேரி     ஈ)  சரஸ்வதி 

 5. தோழமை என்று அழைத்தவன் யார்? யாரை ?

அ)  இராமன் - இலக்குவன் 

ஆ)பரதன் - இராமன்  இ)ஹனுமான -சீதை  ஈ)இராமன் -குகன்.


 9 .பின்வரும்  உரைநடைப் பத்தியைப் படித்துப்  பொருள் உணர்ந்து  தொடர்ந்து  வரும் பலவுள்  தெரிவு வினாக்களுக்கு  ஏற்ற விடைகளை  எழுதுக                                                                5*1 = 5.

 மொழிபெயர்ப்பு , எல்லாக் காலங்களிலும் தேவையான ஓன்று. விடுதலைக்குப்பிறகு நாட்டின் பல பகுதிகளையும் ஒரே ஆட்சியின்கீழ்  இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தேசிய உணர்வு ஊட்டுவதற்கும்  ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கும் இந்திய அரசு , மொழிபெயர்ப்பை ஒரு கருவியாகக்  கொண்டது. ஒரு மொழியில் இருக்கும் நூல்களைப்  பிற மொழியில் மொழிபெயர்த்தது. பல்வேறு மாநிலங்களில் இருந்த இருக்கின்ற எழுத்தாளர்கள் , சிந்தனையாளர்கள் ஆகியோரைப்  பற்றிய நூல்களையும் வெளியிட்டது . இத்தகைய மொழிபெயர்ப்பு முயற்சிகள் சாகித்ய அகாதெமி , தேசிய புத்தக நிறுவனம் , தென்னிந்தியப்  புத்தக நிறுவனம் ஆகியவற்றின் மூலம் செய்யப்பட்டன. 


வினாக்கள் :

1. எல்லாக்காலங்களிலும் தேவையானது  எது   ?

அ) உணவு  ஆ) மொழி  இ) மொழிபெயர்ப்பு     ஈ) நூல்கள் 

2. ஒற்றுமைக்கான முயற்சி எப்போது  மேற்கொள்ளப்பட்டது  ? 

அ) விடுதலைப்போரில்  ஆ) மன்னர் ஆட்சியில்      

         இ) விடுதலைக்குப்பின்  ஈ) ஆங்கிலேயர்கள் காலத்தில்  

3. மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டவை  எவை   ?

அ) வேதங்கள்      ஆ)  மாநில நூல்கள்      

இ) காப்பியங்கள்      ஈ) இலக்கியங்கள்  

4.  எம்மொழி நூல்கள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டன  ?

அ) பிற மொழிநூல்கள்    ஆ)  ஆங்கிலேயர் நூல்கள் 

 இ) அறிவியல் நூல்கள்     ஈ) ஆராய்ச்சி நூல்கள் 

          5. தேசிய நூல் நிறுவனம் எது  ? 

அ ) கழகப்பதிப்பு     ஆ) பழனியப்பா பதிப்பகம்       

இ)சாகித்ய அகாதெமி  ஈ) அன்னை பதிப்பகம்.

 

 

10 ) பின்வரும்  செய்யுள் வினாக்களில்    இரண்டனுக்கு மட்டும்   விடையளி  -                                                        2 * 3 = 6.

1. பெருஞ்சித்திரனார் கூறும் தமிழின் சிறப்புகளை   எழுது ?

2.   மகாகவி பாரதியார் காற்றிடம் வேண்டுவன யாவை ?

        3. கம்பர் காட்டும் இயற்கைகொலுவீற்றிருக்கும் மருத                                நிலத்தின் காட்சிபற்றி எழுது  ?

4. கல்வியின் சிறப்புப்  பற்றி நீதிவெண்பா கூறுவது யாது ?

 

 11 ) எவையேனும் மூன்று உரைநடை வினாக்களுக்கு மட்டும்  விடையளி  -        3 * 4 =12.

 

1.    தேவநேயப்பாவாணர் பட்டியலிடும்  இளம்பயிர் வகை மற்றும்               தோல்வகைப்  பெயர்களை எழுதுக. 

2.     காற்றினால் உண்டாக்கும் நன்மைகள்  குறித்து எழுது  ?

3.     தமிழரின் இலக்கியங்கள் காட்டும் விருந்து போற்றும் பண்பு பற்றி  எழுதுக. 

          4.      மொழிபெயர்ப்பின் இன்றியமையாத்  தேவை  குறித்து எழுது ?

           5.    காவடியாட்டம் , பொய்க்கால்  குதிரையாட்டம் பற்றி எழுது ?  


12 ) பின்வரும் துணைப்பாடத்தலைப்பிற்கு ஏற்ற கருத்துகளைக்  கதை வடிவில்  ஒன்றிற்கு மட்டும் விடை எழுதுக.                                                                                          (7 ).

 

1 )     ப. சிங்காரம் அவர்களின் கதை உணர்த்தும் கடற்பயணம் குறித்து எழுதுக.     

2 )       விண்ணைத்தாண்டிய  நம்பிக்கை  - உணர்த்தும்  அறிவியல் உண்மையை எழுதுக.

3)  பாய்ச்சல் - வழியாக அழகு  கதாபாத்திரம்   நமக்கு  உணத்தும்   இயல்பான பண்பு என்ன ?       

 

 13 )  படத்தினைப் பார்த்து வருணித்து எழுதுக .              1 * 3 =3.


                    


   14. ஏதேனும் ஒரு கடிதத்திற்கு  விடை தருக.                        1 *6 = 6

         அ )     

    காணாமல்போன ஓட்டுநர் உரிமத்தைக்   கண்டுபிடித்துத் தரவேண்டி உங்கள்  பகுதியின்  காவல்நிலைய ஆய்வாளருக்குக் கடிதம் எழுதுக.

                ஆ )      

அறிவியல் தமிழ் மன்றம் நடத்திய பேச்சுப்போட்டியில்  முதற் பரிசு பெற்றது குறித்து,  வெளியூரில் வசிக்கிக்கும்  உனது நண்பனுக்கு கடிதம் வரைக.

                  இ  )    

  நீங்கள் வசதிக்கும் பகுதியில்  விளையாட்டுத்திடல்   அமைத்துத்தரவேண்டி   விளையாட்டுத்துறை ஆணையருக்குக்   கடிதம் எழுதுக.     

( கடிதம் எது ஆயினும்  உனது முகவரி:  பேரரசன்  / பேரரசி - கதவு எண் : 27,  பாரதியார் யார் தெரு , கண்ணதாசன் நகர்,   திருநெல்வேலி  -2  எனக்கொள்க. )


15 )  பின் வருவனவற்றுள் ஏதேனும் ஒரு பகுதியில் உள்ள குறிப்புகளைக்கொண்டு கட்டுரை வரைக                      ( 6 ).


1)         முன்னுரை - இலக்கியங்கள் - காலந்தோறும் மாற்றம்-  காப்பியங்கள் - புதுக்கவிதை - ஹைஹூ கவிதை - உரைநடை  -   - முடிவுரை .

2)         முன்னுரை -  அறிவியல் வளர்ச்சி - போக்குவரத்து - மருத்துவம் கணினி - கல்வி வளர்ச்சி - -முடிவுரை .

3)         முன்னுரை - சங்ககாலப் புலவர்கள் - சமையல் - பெண்கல்வி - அறிவு வளர்ச்சி -  சரிநிகர் சமம் - வேலைவாய்ப்பு - நாட்டின் கண்கள் -  முடிவுரை .


வாழ்க   வளமுடன் ..!                                               வாழ்க  வையகம் ..!


தமிழாசிரியர் : 

அன்புச்செல்வன் பழ. 

ARIVIYAL TAMIL MANTRAM  /  அறிவியல் தமிழ் மன்றம் 

ponanbu2023



Comments

Popular posts from this blog

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...2025

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )