Posts

Showing posts from June, 2026

STD VII NON DETAILS2026

  இயல் -01  விரிவானம் ஆளுக்கு ஒரு வேலை  பொம்மலாட்டம்  நீங்கள்  அறிந்த  சில  சொலவடைகளையம்  அவை உணர்த்தும்  பொருளையும்   எழுதுக. முன்னுரை: சொலவடைகள் என்பன சிறுசிறு தொடர்களாக வட்டார வழக்கில் வழங்கி வருபவை. அவைகள்  பேச்சு மொழியின் அழகியலையும், பண்பாட்டுக் கூறுகளையும் கொண்டவை.  சுருங்கச் சொல்லி  விளங்க வைப்பதில உவமை கள் போன்று  பயன்படுகின்றன .  1) பிடிவாதம் தவிர் . புண்ணுக்கு மருந்து போட முடியும்; புடிவாதத்துக்கு மருந்து போடா முடியமா?  புடிவாதம் தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. 2) தகாத செயல்களைத் தவிர். நல்ல பாம்பு படம் எடுக்கலாம்; நோக்கலாம் பூச்சி படம் எடுக்கலாமா ? நமக்குத் பொருந்தாத செயல்களைத் தவிர்த்தல் வேண்டும் என்று கூறுகிறது. 3) உணர்வற்று இருத்தல் கூடாது.  குத்துக்கல்லுக்கு குளிரா ? வெய்யிலாங்கிற  மாதிரி. நாம் பிறரின் உணர்வுகளை  புரிந்துகொண்டு நடக்க வேண்டும். உணர்வற்று இருத்தல் கூடாது. 4) ஆதரவு இன்றி  வாழ்தல்: தட்டிப் போட்ட ரொட்டிக்குப்  புரட்டிப் போட ஆளு இல்லை.  தன...

STD X NON DETAIL -01 புயலிலே ஒரு தோணி

      புயலிலே ஒரு தோணி சிங்கம்புணரி ப.சிங்காரம் குறிப்புச்சட்டகம் முன்னுரை கப்பித்தான்  கடற்கூத்து  தொங்கான்  கரையைக்கண்டனர்  முடிவுரை முன்னுரை    தமிழர்கள் இடம்பெயர்ந்து வா ழ்தல் மிக இயல்பான ஒன்றாகும். ப சிங்காரம் அவர்களின் புயலிலே ஒரு தோணி எனும் நாவல் மிக அழகாக அதனை விவரிக்கிறது. புலம்பெயர்தலின் போது ஏற்பட்ட கடற் கூத்தின் கோரத்தாண்டவத்தை ப் பற்றி நாவலில் விவரித்துள்ளார். கப்பித்தான்: கொளுத்திய வெயில் மறைந்தது; வானம் இருண்டது பேசிக்கொண்டிருந்த மாலுமிகள் விரைந்து செயல்பட்டனர் . பயம் எல்லோர் முகத்திலும் தெரிந்தது . இடி முழக்கத்துடன் மின்னல் மின்னியது;  மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்தது . சூறாவளியுடன் சேர்ந்து அலையும் சேர்ந்து தொங்கானைத்   திணறடித்தன. அனைவரும் அச்சத்துடன் பலகைக்குள் புகுந்து கொண்டனர் . கடற்கூத்து வானமும் மழையும் கடலும் மீண்டும் மீண்டும் கொந்தளித்தன;   தொங்கான் தாவிக்குதித்துத்   தள்ளாடுகிறது . சுழல்கிறது , மூழ்கி நீந்துகிறது. கடலின் சீற்றமும், , . இருட்டில் கப்பல் அசைந்து நொறுக்குவ...

NON DETAIL PRESENTATION TIPS FOR CLASS VIII TO X

துணைப்பாடங்கள் எழுதும்போது  பின்பற்ற  வேண்டிய     வழிமுறைகள்   1) துணைப்பாடத்தின் மையக்கருத்துச் சிதையாமல் எழுத வேண்டும். 2) முன்னுரை , பொருளுரை,  உட்தலைப்புகள் , முடிவுரை  என்னும் அமைப்பில் எழுதிட வேண்டும். 3) கருத்துச்சிதையாமல் பொருள் நிறைவுடன் பத்தி பிரித்து எழுதிட வேண்டும். 4) கதையோட்டம் , கருத்தோட்டம்    தடை படக்கூடாது. 5)  சொற்பிழை , சந்திப்பிழை , வாக்கியப்பிழை ,  கருத்துப்பிழை என எப்பிழைகளும் இல்லாமல் எழுத வேண்டும். 6) கையெழுத்துத் தெளிவாகவும்   அழகாகவும்  இருத்தல் வேண்டும்.  7) ஒவ்வொரு பத்தியும்  நான்கு  முதல் ஆறு வரிகளுக்குள் அமைதல்  நலம். 8) கதைக்கு அல்லது கருத்துக்குப் பொருந்தாதவற்றைத் தவிர்த்துவிடுதல்    சிறப்பு. 9) தலைப்பு  ,  உட்தலைப்புகள்  பிரித்து எழுதுதல் கட்டாயம்.  10)  தாளின் முழுப்பக்கத்தில்  மட்டுமே எழுத வேண்டும் . பொருத்தமான தலைப்பு  மற்றும் கருத்துக்கோர்வைக்கு  மதிப்பெண்   அதிகமாக   வழங்கப்படும். ...