பத்தாம் : வகுப்பு                           

செய்யுள்                       இயல் : மூன்று 


காசிக்காண்டம் - அதிவீரராம பாண்டியர்

 

1 . தமிழரின்  விருந்தோம்பல் பற்றி எழுதுக.

விருந்தோம்பலின்  முதல்நிலை மகிழ்வித்து  மகிழ்தலே  ஆகும்.

தமிழரின் தலைசிறந்த அறம் விருந்தோம்பல் ஆகும் .

இல்லறம் காண்பதும்  விருந்தோம்பல்  என்னும் நல்லறம் 

செய்வதற்காகவே ஆகும் . விருந்தினரை வரவேற்கும்  ஒன்பது முறைகள் 

பற்றிக்  காசிக்காண்டம் எனும் நூலின்வழியாக அதிவீரராம பாண்டியர் விளக்கி உள்ளார். 


2 அதிவீரராம பாண்டியர்  பற்றிய செய்திகளை எழுது?

பாண்டியநாட்டின்  அரசராகஇருந்தவர்   அதிவீரராம  பாண்டியர் நல்ல   புலவராகவும் விளங்கியுள்ளார்.தமிழ்ச்சங்கம் வைத்துத்   தமிழ் வளர்த்த பெருமை உடையது  பாண்டிய நாடு.  அவருக்குச் சீவலமாறன் என்ற  சிறப்புப் பெயரும்  உண்டுகாசிக்கண்டம் என்னும் நூலை எழுதிய பெருமைக்கு உரியவர்.  காசிமாநகரின் ( வாரணாசி ) பெருமைகளையும் இந்நூலில்  கூறியுள்ளார்.  இது வாழ்வியல் அறங்கூறும் நூலாகும். இப்பாடல் இல்லொழுக்கம் கூறிய பகுதியில் உள்ள 17- வது பாடலாக  அமைந்துள்ளதுவிருந்தினரை வரவேற்கும் முறைகள்   குறித்து  பாடலில் விளக்கமாகக்  கூறியுள்ளார் .

  அதிவீரராம பாண்டியர்  எழுதிய நூல்கள் 

1. காசிக்காண்டம்

2. வெற்றிவேட்கை  எனும் நறுந்தொகை.

3. நைடதம்

4. லிங்க  புராணம்.

5.வாயு சம்கிதை.

6.திருக்கை அந்தாதி.

7.கூர்ம புராணம்.    

 

3. விருந்தினரை வரவேற்றல்  குறித்துக்  காசிக்காண்டம்கூறுவது  யாது  ?

 1. அவர்களின் உயர்ந்த குணங்களை வியந்து உரைத்தல்.

2, நல்ல சொற்களை  இனிமையாகப்பேசுதல் .

3. முகமலர்ச்சியுடன் அவரை நோக்குதல் .

4. வீட்டிற்குள் வருகவென வரவேற்றல் .

5. அவர் எதிரில் நிற்றல் , இருத்தல் .

6. அவர்களின் மனம்மகிழும்படி பேசுதல் .

7. அவர்களின் அருகில் அமர்ந்து கொள்ளுதல் .

8. விடைபெற்றுச் செல்லும்போது  வாயில்வரை  பின்தொடர்ந்து செல்லல் .

9. புகழ்ச்சியாக  முகமன் கூறி வழியனுப்புதல்

  இவ்வாறு விருந்தினரை வரவேற்கும்  ஒன்பது முறைகள்   குறித்துப்   பாடலில் விளக்கமாகக்  கூறியுள்ளார் அதிவீரராம  பாண்டியர்.



தமிழன் என்று சொல்லடா....!!         தலை நிமிர்ந்து நில்லடா..!! 

அன்புடன் 

உங்கள் அன்பின் அன்பன்...!

 அன்புச்செல்வன்  பழ .

9444892969

வாழ்க   வளமுடன் ..!  வாழ்க  வையகம் ..!!

ponanbu

 

Comments

Popular posts from this blog

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...2025

BLUE PRINT AND MODEL FOR STD X III LANG SEP2025 TEST.

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை