மரங்கள்

   பத்தியைப் படித்துப்  பொருள் உணர்ந்து  தொடர்ந்து  வரும் பல்வுள்  தெரிவு வினாக்களுக்கு  ஏற்ற விடைகளை  எழுதுக                    5*1 = 5.

                  மரங்கள் நமது  சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் அரணாக உள்ளன. மரங்கள்தான் மண்  வளத்தைப்  பேணிப்பாதுகாக்கின்றன. மரங்கள் பகற்பொழுதில்  உயிர்க்காற்றை நமக்குத் தருகின்றன. புவியின் வெப்பத்தைத்  தணிக்க உதவுகின்றன. ஆனால், மனிதர் சுயநலத்திற்காக மரங்களை வெட்டி அதிலிருந்து காகிதம்,  இரப்பர் , கோந்து, மேஜை நாற்காலி போன்றவற்றைச்  செய்து விற்கின்றனர். மரங்கள் அழிவதால் மனிதகுளம் பெரும்சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். இந்தியாவில்     60% மரங்கள் இருக்க வேண்டும். ஆனால்,  அது நாளும் குறைந்து வருக்கின்றது. அசோகா சக்கரவர்த்தி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மரங்களின் பெருமையை உணர்ந்து, சாலையின் இரு மருங்கிலும் எண்ணற்ற மரங்களை நட்டார். எனவே, மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். மனிதர்களுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து உயிர்களுக்கும் அரணாக உள்ளது. மரங்கள் மருத்துவக்குணம் வாய்ந்தவை.

வினாக்கள் :

1. மரங்கள் தரும் பொருட்களில்  சிலவற்றை எழுதுக.  

அ)காகிதம், இரப்பர்  ஆ)  கண்ணாடி , மண்  இ)  கோந்து ,தகரம்  ஈ) சுண்ணாம்பு, மேசை.  

2.   அசோகாச்  சக்கரவர்த்தி என்ன செய்தார்..?

அ) குளம் வெட்டினார் ஆ) மரங்களை நட்டார்  இ) அன்னச் சத்திரம் அமைத்தார்  ஈ) மலைகளில்  மரம் நட்டார். 

3. மரங்கள்  எப்படி எல்லா  உயிர்களுக்கும்  உதவுகின்றன ..?

அ ) பாதுகாப்பு அரணாக    ஆ)  பாதுகாப்பு நண்பனாக   இ) இயற்கையின் எதிரியாக   ஈ)  இயற்கையான வேலியாக.

4. மனிதர்களுக்கு   எக்காற்றை  மரங்கள்  வழங்குகின்றன.?

அ )  உயிர்க்காற்றை     ஆ) உப்புக்காற்றை      இ) நச்சுக்காற்றை                    ஈ) காரியமிலக்காற்றை. 

          5. மண்வளத்தைப்   பேணிக்காப்பன  எவை..? 

அ )  மனிதர்கள்     ஆ) விலங்குகள்   இ) பறவைகள்   ஈ) மரங்கள்   

Comments

Popular posts from this blog

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...2025

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )