பயிற்சித்தேர்வு - II 2 டிசம்பர் 2025. வகுப்பு : பத்து
கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண் மேனிலைப்பள்ளி ,
எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு , அரும்பாக்கம் , சென்னை - 600106.
பயிற்சித்தேர்வு - II .
வகுப்பு : பத்து தமிழ்த்தேர்வு மதிப்பெண் : 40.
நாள் ; 1 டிசம்பர் 2025 கால அளவு ; 90 நிமிடம்.
1. பின்வரும் பத்தியைப் படித்துப் பொருள் உணர்ந்து தொடர்ந்து வரும் பலவுள் தெரிவு வினாக்களுக்கு ஏற்ற விடைகளை எழுதுக. 5*1 = 5.
சோழன் பகைவரை வென்று வீரத்தை நிலைநாட்டும் தன்மையுடையவன். எனினும், இரவலர்பால் பேரருள் பாராட்டுபவன். அவன்பால் சென்று , உணவில்லை என்று அடுகளம் நீட்டினால் , அதில் சோறினைப் பெய்யமாட்டான். அவனது தலைநகரான கருவூரையே அதற்கு ஈடாகத் தந்து விடுவான். பெண்கள் பூவிற்கு உரிய விலை தாருங்கள் எனக் கேட்டால் வைரங்கள் வழங்கிடுவான். எனவே, பாரிசில்பெற விரும்புவோர் சோழனை நாடி வாருங்கள். பழையதான இம்மண்ணின் உரிமை யாருக்கு ? என்று ஆராய்ந்தால் மண்பாண்டம் செய்யும் குயவர்களிடம் உள்ள மண்ணானது, பானையாகி யாருக்குப் பயன்தரப்போகிறது என்பதை யாராலும் கூறிட இயலாது. அதுபோல , சோழனின் கைப்பொருளான நாடு யாருக்கு உரிமையுடையதாகும் என்பதைக்கூறிட இயலாது.
வினாக்கள்:
1. ) சோழன் எப்படிப்பட்டவன் ?
அ) நல்லவன் ஆ) உயர்ந்தவன் இ) வீரமுடையவன் ஈ ) காயமுடையவன்
2. ) சோழனுடைய நாடு எத்தகையது ?
அ) வளங்கள் உடையது ஆ) பக்தி உடையது இ) வறுமை ஈ ) ஆறுகளைக் கொண்டது.
3. ) பெண்கள் தரும் பூவிற்கு விலையாகத் தரப்படுவது எது..?
அ) மாலைகள் ஆ) மதுரை மாநகர் இ) பொற்காசுகள் ஈ) வைரங்கள்
4. மண் பாண்டங்கள் செய்வோர் யார் ?
அ) விறலியர் ஆ) குயவர்கள் இ) பாணர்கள் ஈ ) கூத்தர்கள்
5. இது எந்த மன்னனின் சிறப்பினைக் கூறுகிறது ?
அ) சேரர்கள் ஆ) சோழர்கள் இ) களப்பிரர்கள் ஈ) பாண்டியர்கள்
பகுதி - ஆ இலக்கணம்
2 .சான்று தருக ( எவையேனும் மூன்று மட்டும் ) 3*1 = 3.
1.சொல்லிசை அளபெடை
அ) தீதொரீஇ ஆ) படாஅபறை இ) ஓஒதல் வேண்டும் ஈ) தூஉம் மழை.
2. உவமைத்தொகை
அ ) பலமுத்து ஆ) ஊறுகாய் இ) கபிலபரணர் ஈ)பஞ்சுவிரல்.
3. அன்மொழித்தொகை
அ ) கயல் பாடினாள் ஆ)சிவப்புப்புச்சட்டை பேசினார்
இ) தேர்ப்பாகன் ஈ) கருங்குரங்கு.
4. தொழிற்பெயர்
அ ) ஆடு ஆ) ஆடினாள் இ) ஆடினார் ஈ) ஆடல்.
5. வேற்றுமைத்தொடர்
அ ) கட்டுரை படித்தான் ஆ) கட்டுரை படி இ) கட்டுரையைப்படித்தான் ஈ) படித்தான் கட்டுரை.
3. நிரப்புக ( எவையேனும் மூன்று மட்டும் ) 3*1 = 3.
1. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் தொடர்ந்து வந்து பொருளை உணர்த்துவது ---------- எனப்படும்.
அ )தொடர் மொழி ஆ) அளபெடை இ)பொதுமொழி ஈ) தனிமொழி
2. வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் ----------- தொழிற்பெயர் ஆகும்.
அ ) அடுக்குத்தொடர் ஆ) இரட்டைக்கிளவி இ) விகுதிபெற்ற தொழிற்பெயர் ஈ) எதிர்மறைத் தொழிற்பெயர்
3. தொகைநிலைத்தொடர் ----------- வகைப்படும்.
அ ) ஆறு ஆ) ஏழு இ) எட்டு ஈ) ஒன்பது
4. காலம் கரந்த ---------------- வினைத்தொகை ஆகும்.
அ ) பெயரெச்சமே ஆ) வினையெச்சமே இ) தெரிநிலை வினைமுற்று ஈ) குறிப்பு வினைமுற்று.
5. எழுவாய்த் தொடரானது ------- வகையாக அமையும்.
அ ) இரண்டு ஆ) நான்கு இ) மூன்று ஈ) ஐந்து
4. கூறிவாறு செய்க ( எவையேனும் மூன்று மட்டும் ) 3*1 = 3.
1. கரும்பு தின்றான் ( எவ்வகைத் தொகை நிலை )
அ ) உவமைத்தொகை ஆ) உம்மைத்தொகை இ)வேற்றுமைத்தொகை ஈ)வினைத்தொகை
2. பரிசு பெற்றான் ( வினையாலணையும் பெயராக்குக )
அ ) பரிசு பெறு ஆ) பெற்றான்பரிசு இ) பரிசு பெற்றவனைப்பாராட்டினர் ஈ) பரிசுபெற்றான் பாராட்டினர்.
3.பவளவாய் ( உருவகமாக்குக )
அ )வாய்ப்பவளம் ஆ) பவளம் இ) வாய்ப்பவள் ஈ) பல்லாகிய வாய்
4. செந்தாமரை ( எவ்வகைப் பண்புத்தொகை )
அ ) வண்ணம் ஆ) வடிவம் இ) அளவு ஈ) சுவை
5. சிரித்துப்பேசினார் ( அடுக்குத்தொடராக்குக )
அ ) சிரித்துச் சிரித்துப்பேசினார். ஆ) அழுது அழுது பேசினார் இ) கலகலவெனச் சிரித்தார் ஈ) பேசிப்பேசி சிரித்தார்.
5. இலக்கணக்குறிப்புத் தருக ( எவையேனும் மூன்று மட்டும் ) 3*1 = 3.
1. உறாஅர்க்கு உறுநோய்
அ) செய்யுளிசையளபெடை ஆ) அடுக்குத்தொடர் இ) ஒற்றளபெடை ஈ)வினையாலணையும்பெயர்.
2. அமுதா பாடினாள்
அ ) வினையெச்சத்தொடர் ஆ) குறிப்பு வினையெச்சம் இ) தெரிநிலை வினைமுற்று ஈ) தொடர்மொழி.
3. கேட்ட பாடல்
அ ) பெயரெச்சத் தொடர் ஆ) வினையெச்சத்தொடர் இ) எழுவாய்த்தொடர் ஈ) வினைமுற்றுத்தொடர்.
4. மாமன்னர்
அ ) பொதுமொழி ஆ) இடைச்சொல்தொடர் இ) உரிச்சொல்தொடர் ஈ) குறிப்பு வினைமுற்று.
5. கொல்களிறு
அ ) வினைத்தொகை ஆ) பண்புத்தொகை இ) உம்மைத்தொகை ஈ) இருபெயரொட்டுப்பண்புத்தொகை.
பகுதி - இ ( இலக்கியம் ).
6. பின்வரும் கோடிட்ட இடங்களை நிரப்புக. 2*1 = 2.
1. எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
------------------ காண்பது அறிவு.
அ) எப்பொருள் ஆ) மெய்ப்பொருள் இ)இப்பொருள் ஈ) நற்பொருள்
2. அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை ---------- தரும்.
அ) முயற்சி ஆ) பயிற்சி இ) உயர்ச்சி ஈ) தளர்ச்சி
7. பின்வரும் செய்யுள் பகுதியைப் படித்துப் பொருள் உணர்ந்து, தொடர்ந்து வரும் பல்வுள் தெரிவு வினாக்களுக்கு ஏற்ற விடைகளை எழுதுக. 5*1 = 5.
முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்
மெத்த வணிகலமும் மேவலால் - நித்தம்
அணைகிடந்தே சங்கத்தவர் காக்க ஆழிக்கு
இணைகிடந்த தேதமிழ் ஈண்டு.
வினாக்கள்:
1. இப்பாடலில் ஒப்பிடப்படுபவை எவை?
அ ) முத்தமிழ் - முக்கடல் ஆ) கடல் - கப்பல்இ) கடல் - சங்கு ஈ) கடல் - தமிழ்2. தமிழிணைக் காப்போர் யார்?
அ) சான்றோர் ஆ) மூத்தோர் இ) புலவர்கள் ஈ) பெண்டிர்
3.அணிகலன்களாக இருப்பவை எவை ?
அ) புராணங்கள் ஆ) காப்பியங்கள் இ) சிற்றலக்கியங்கள் ஈ) புறநானூறு
4.ஒரு பாடலை , இருபொருள் தருமாறு அமைப்பது ----------------- எனப்படும்.
அ) இரட்டுற மொழிதல் ஆ) இருபொருள் இ) ஒப்பிடுதல் ஈ) கூட்டு
5. பாடலாசிரியரின் இயற்பெயர் என்ன?
அ ) சந்தக்கவிமணி ஆ) தமிழழகனார் இ) பாரதியார் ஈ) சண்முக சுந்தரம்.
7 . ) பின்வரும் செய்யுள் வினாக்களில் ( இரண்டனுக்கு மட்டும்) விடையளி: 3*2= 6.
1. பாரதியார் காற்றிடம் வேண்டுவன யாவை ?
2. தமிழின் தனிச்சிறப்புகளாகப் பெருஞ்சித்திரனார் கூறுவன யாவை ?
3.அதிவீரராம பாண்டியர் கூறும் விருந்தினரை வரவேற்கும் முறைகளை வரிசைப்படுத்தி எழுது ?
4) ஒழுக்கமுடைமை பற்றி வள்ளுவர் கூறுவன யாவை ?
8 ) எவையேனும் இரண்டு உரைநடை வினாக்களுக்கு மட்டும் விடையளி 2* 5 =10.
1. தேவநேயப்பாவாணர் குறிப்பிடும் பூவின் நிலைகள் மற்றும் இளம்பயிர் வகைகள் குறித்து எழுதுக. ?
2. மனிதர்களால் காற்று மாசடைவதற்கான காரணங்களையும் , அதற்கான தீர்வுகளையும் பட்டியலிடுக.
3. இலக்கியங்களால் அறியப்படும் வறுமையிலும் விருந்து போற்றிய தமிழரின் பண்பு குறித்து விளக்கி வரைக.
வாழ்க வளமுடன்
Comments
Post a Comment