காந்தியடிகள் , தமது சிறுவயதில் அரிச்சந்திரனின் கதையைப் படித்தார்.  அவனது    கதையினைத்  தெருக்கூத்தாகவும் பலமுறை கண்டார்; கண்ணீர் வடித்தார்.  மனிதன்     உண்மை மட்டுமே  பேசி  வாழ்வது அவ்வளவு கடினமா  ?   என்று எண்ணினார் .  ஒவ்வொரு முறை,  அரிச்சந்திரனின் கதையைப் படிக்கின்ற போதும் , தெருக்கூத்தாகப் பார்க்கின்றபோதும்  மணமுறுக்கிக்கிக் கண்ணீர் வடித்தார்.  அப்படி ஒரு மனிதன் மீண்டும் பிறக்க மாட்டானா ? என்று எண்ணினார்.  இறைவனின் திருவருளால் அவன் சொர்க்கம் சென்றிருப்பான். அப்படிச்  சென்றிருந்தால்   மீண்டும் பூமியில் மனிதனாகப்  பிறக்க மாட்டாரே   என்பதை   நம்பினார்.  அப்போது தான் அவருக்கு ஒரு நல்ல யோசனை தோன்றியது. நாமே ஏன்  அரிச்சந்திரன் போல  வாழ்ந்துகாட்டக் கூடாது ? என்ற எண்ணம்  தான் அது.   காந்தியடிகள்  தன்னையும்   ஒரு  அரிச்சந்திரனாகவே  கருத்திக் கொண்டார். அரிச்சந்திரனைப்போல்  உண்மை மட்டுமே பேசுவது  என்று முடிவெத்தார் .   இளம்வயதில் அவருக்குத் தோன்றிய  இவ்வெண்ணம்  பிற்காலத்தில்  அவரை ஒரு மகானாகவே  மாற்றியது. நல்லதே மட்டுமே நினைப்போம் , மண்ணில்  நல்ல வண்ணம் வாழ்வோம்.

வினாக்கள்: 

1. அரிச்சந்திரனின் கதையைப் படித்தவர்  யார் ?  

2.  யாருக்காக மணமுறுக்கிக் கண்ணீர் வடித்தார்  ?

3.  நம்மை மகானாக்குவது    எது ?

4. இறைவனின் திருவருளால் நமக்குக் கிடைப்பது  எது  ?

5. பத்திக்கு  ஏற்ற  ஒரு தலைப்பிடுக.

                                             இலக்கண வினாக்கள்

ஆ . நிரப்புக                                                                                                                                      2* 1 = 2.

1) ஓசை  குறையும்போது சொற்கள்   நீண்டு  ஒலிப்பது  ___________  எனப்படும்.

2) வினைத்தொகையின்  வேறுபெயர்   ______  ஆகும்.

Comments

Popular posts from this blog

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...2025

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )