பலவுள் தெரிவு வினாக்களுக்கு ஏற்ற விடைகளை எழுதுக 5*1 = 5.
9 .பின்வரும் உரைநடைப் பத்தியைப் படித்துப் பொருள் உணர்ந்து தொடர்ந்து வரும் பலவுள் தெரிவு வினாக்களுக்கு ஏற்ற விடைகளை எழுதுக 5*1 = 5.
மொழிபெயர்ப்பு , எல்லாக் காலங்களிலும் தேவையான ஓன்று. விடுதலைக்குப்பிறகு நாட்டின் பல பகுதிகளையும் ஒரே ஆட்சியின்கீழ் இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தேசிய உணர்வு ஊட்டுவதற்கும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கும் இந்திய அரசு , மொழிபெயர்ப்பை ஒரு கருவியாகக் கொண்டது. ஒரு மொழியில் இருக்கும் நூல்களைப் பிற மொழியில் மொழிபெயர்த்தது. பல்வேறு மாநிலங்களில் இருந்த இருக்கின்ற எழுத்தாளர்கள் , சிந்தனையாளர்கள் ஆகியோரைப் பற்றிய நூல்களையும் வெளியிட்டது . இத்தகைய மொழிபெயர்ப்பு முயற்சிகள் சாகித்ய அகாதெமி , தேசிய புத்தக நிறுவனம் , தென்னிந்தியப் புத்தக நிறுவனம் ஆகியவற்றின் மூலம் செய்யப்பட்டன.
வினாக்கள் :
1. எல்லாக்காலங்களிலும் தேவையானது எது ?
அ) உணவு ஆ) மொழி இ) மொழிபெயர்ப்பு ஈ) நூல்கள்
2. ஒற்றுமைக்கான முயற்சி எப்போது மேற்கொள்ளப்பட்டது ?
அ) விடுதலைப்போரில் ஆ) மன்னர் ஆட்சியில்
இ) விடுதலைக்குப்பின் ஈ) ஆங்கிலேயர்கள் காலத்தில்
3. மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டவை எவை ?
அ) வேதங்கள் ஆ) மாநில நூல்கள்
இ) காப்பியங்கள் ஈ) இலக்கியங்கள்
4. எம்மொழி நூல்கள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டன ?
அ) பிற மொழிநூல்கள் ஆ) ஆங்கிலேயர் நூல்கள்
இ) அறிவியல் நூல்கள் ஈ) ஆராய்ச்சி நூல்கள்
5. தேசிய நூல் நிறுவனம் எது ?
அ ) கழகப்பதிப்பு ஆ) பழனியப்பா பதிப்பகம்
இ)சாகித்ய அகாதெமி ஈ) அன்னை பதிப்பகம்.
Comments
Post a Comment