இரண்டாம் பருவத்தேர்வு - ஜனவரி 2024.
- Get link
- X
- Other Apps
கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண் மேனிலைப்பள்ளி ,
எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு ,
அரும்பாக்கம் , சென்னை - 600106.
------------------------------
இரண்டாம் பருவத்தேர்வு - ஜனவரி 2024.
வகுப்பு : பத்தாம் தமிழ்த்தேர்வு மதிப்பெண் : 80.
ஜனவரி 2024. கால அளவு ; 3 மணி .
பகுதி - அ
1. பின்வரும் பத்தியைப் படித்துப் பொருள் உணர்ந்து தொடர்ந்து வரும் பல்வுள் தெரிவு வினாக்களுக்கு ஏற்ற விடைகளை எழுதுக. 5*1 = 5.
மரங்கள் நமது சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் அரணாக உள்ளன. மரங்கள்தான் மண் வளத்தைப் பேணிப் பாதுகாக்கின்றன. மரங்கள் பகற்பொழுதில் உயிர்க்காற்றை நமக்குத் தருகின்றன. புவியின் வெப்பத்தைத் தணிக்க உதவுகின்றன. ஆனால், மனிதர் சுயநலத்திற்காக மரங்களை வெட்டி அதிலிருந்து காகிதம், இரப்பர் , கோந்து, மேஜை நாற்காலி போன்றவற்றைச் செய்து விற்கின்றனர். மரங்கள் அழிவதால் மனிதகுளம் பெரும்சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். இந்தியாவில் 60% மரங்கள் இருக்க வேண்டும். ஆனால், அது நாளும் குறைந்து வருக்கின்றது. அசோகா சக்கரவர்த்தி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மரங்களின் பெருமையை உணர்ந்து, சாலையின் இரு மருங்கிலும் எண்ணற்ற மரங்களை நட்டார். எனவே, மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். மனிதர்களுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து உயிர்களுக்கும் அரணாக உள்ளது. மரங்கள் மருத்துவக்குணம் வாய்ந்தவை.
வினாக்கள் :
1. சுற்றுச்சூழலினைப் பாதுகாக்கும் அரண் எது ?
அ) அரசன் ஆ) மக்கள் இ) மரங்கள் ஈ) காவலர்கள்
2. மரங்களிலிருந்து தயாரிக்கப்படுவது எது ?
அ) ஆணி ஆ) மண் வெட்டி இ) காகிதம், ரப்பர் ஈ) தகரப்பெட்டி
3. சாலைகளின் ஓரங்களில் மரங்களை நட்டவர் யார் ?
அ ) சோழன் ஆ) அசோகர் இ) பல்லவர்கள் ஈ) பாண்டியர்கள்
4. மரங்களின் தனிக்குணம் எது ?
அ) மருத்துவக்குணம் ஆ) கூழாக்குவது இ) காற்றைத்தடுப்பது.
ஈ) பொருளாவது.
5. மரங்கள் அழிவதால் எத்தகைய சூழல் உருவாகும் ?
அ ) நல்ல காற்று ஆ) துன்பம் இ) பெரும்சவால்கள் ஈ) கதவு.
2.பின்வரும் உரைநடைப் பத்தியைப் படித்துப் பொருள் உணர்ந்து தொடர்ந்து வரும் பலவுள் தெரிவு வினாக்களுக்கு ஏற்ற விடைகளை எழுதுக 5*1 = 5.
அறிவினைத்துலங்க வைக்கும் பல கருவிகளுள் நூல் நிலையமும் ஒன்றாகும். கணக்கற்ற அறிஞர்கள் தங்கள் எண்ணங்களை, கண்டுபிடுப்புகளை , நூல்களாக எழுதி உள்ளனர். அந்த நூல்களை எல்லாம் முறையாகவும் , வரிசையாகவும், அழகாகவும் அடுக்கி வைத்துப்பயன்படுத்தும் ஓர் இடமே நூலகமாகும். நூல் நிலையத்தில் பலவகையான நூல்கள் இருக்கும். அவை இலக்கியம், இலக்கணம், வரலாறு, அறிவியல், புவியியல், உயிரியல், கணினியியல், கதை, கட்டுரை, புதினம், அகராதி, கலைக்களஞ்சியம் மற்றும் திறனாய்வு நூல்கள் எனப் பல்வேறு பொருள்களைப்பற்றிய நூல்கள் இடம்பெற்றிருக்கும். அதனை வாங்கிப் படிக்க முடியாதவர்கள், நூல் நிலையத்தில் வந்து படித்துப் பயன் பெறலாம். நூல்நிலையத்தில் பள்ளி நூலகம், கல்லூரி நூலகம், பல்கலைக்கழக நூலகம், குழந்தைகள் நூலகம், அரசுப் பொதுநூலகம், நடமாடும் நூலாகும், நூல்களை வாடகைக்கு விடும் நூலகம் எனப்பல வகைகள் உள்ளன. நூல் நிலையங்கள் மாணவர்களின் அறிவை வளர்த்துக்கொள்ளப் பெரிதும் பயன்படுகின்றன. மாணவர்கள் நூல்கள் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். கண்டது கற்றால் பண்டிதன் ஆகலாம் என்பதை உணர்ந்து நூலகம் சென்று பயனடைவோம் .
வினாக்கள்:
1. அறிவினைத் துலங்கச்செய்யும் கருவி எது?
அ ) நூல் நிலையம் ஆ) அஞ்சல் நிலையம் இ) கல்விநிலையம் ஈ) அறநிலையம்
2. நூல்கள் அழகாகவும், வரிசையாகவும் வைக்கப்பட்டிருக்கும் இடம் எது?
அ ) கல்லூரி ஆ) நடமாடும் வண்டி இ) நூலகம் ஈ) பள்ளி
3. நூல்கள் எவற்றை வளர்க்க உதவும் ?
அ) செடிகளை ஆ) மனதை இ) திறமை ஈ) அறிவை
4. கண்டத்தைக் கற்றவன் ----------- ஆவான்.
அ ) பண்டிதன் ஆ) அறிவாளி இ) அறிவொளி ஈ) விஞ்ஞானி
5. மாணவர்களுக்கான சிறந்த பழக்கம் எது..?
அ ) உண்ணும் பழக்கம் ஆ) படிக்கும் பழக்கம் இ) உறங்கும் பழக்கம் ஈ) எழுதும் பழக்கம் .
இலக்கணம்
3. .சான்று தருக ( எவையேனும் மூன்று மட்டும் ) 3*1 = 3.
1. உயிரளபெடை
அ) தீதொரீஇ ஆ) மருண்ண்ம் இ) இங்ஙனம் ஈ) திகழொளி.
2. எழுவாய்த்தொடர்
அ) நண்பா எழுது ஆ) கேட்ட பாடல் இ) இனியன் கவிஞர்
ஈ) மற்றொன்று
3. படர்க்கை ஒருமைப்பெயர்
அ ) நான்,யான் ஆ)அவன், அவர்கள்
இ) யாம் , நாம் ஈ) நீ, நீவீர் .
4. கொடை வினா
அ )சிங்கப்பூருக்குச் செல்வாயா.?
ஆ) திருக்குறளை எழுதியவர் யார் ?
இ) புதுக்கோட்டைக்கு வழி எது?
ஈ) உன்னிடம் பேனா இருக்கிறதா?.
5. வினைத்தொகை
அ) பச்சைக்கிளி ஆ)முத்துப்பல் இ)அலைகடல்
ஈ) சேர சோழன் .
4. நிரப்புக ( எவையேனும் மூன்று மட்டும் ) 3*1 = 3.
1. இ-கரம் அல்லது இ எனும் எழுத்தில் முடியும் அளபெடை------------.
அ ) ஒற்றளபெடை ஆ) உயிரளபெடை இ) சொல்லிசையளபெடை ஈ) இன்னிசையளபெடை.
2. ஓர் ஆண்டின் கூறுகள் --------------- எனப்படும்.
அ ) கார்காலம் ஆ) சிறுபொழுதுகள் இ) பெரும்பொழுதுகள்
ஈ) மாதங்கள்.
3. தொகா நிலைத்தொடர் ----------- வகைப்படும்.
அ ) ஆறு ஆ) ஏழு இ) எட்டு ஈ) ஒன்பது.
4. செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள்கொள்ளும் முறைக்குப் ---------------- என்று பெயர் .
அ ) பொருள்கோள் ஆ) செய்யுள்நிலை இ) விளக்கநிலை ஈ) பொருள்கொள்ளுதல் .
5. நெய்தல் நிலம் என்பது -------------- ஆகும்.
அ ) மழையும் மலை சார்ந்த நிலமும்
ஆ) கடலும் கடல் சார்ந்தநிலமும்
இ) வயலும் வயல் சார்ந்த நிலமும்.
ஈ) மணலும் மணல் சார்ந்த இடமும்.
5. கூறிவாறு செய்க ( எவையேனும் மூன்று மட்டும் ) 3*1 = 3.
1. மலர் மலர்ந்தது ( எவ்வகைத் தொடர் )
அ )தனிமொழி ஆ) பொதுமொழி இ) தொடர்மொழி
ஈ) கிளவி.
2. செங்கதிரோன் ( இதில் உள்ள பண்புத்தொகை வகையை எழுது )
அ ) அளவு ஆ) வடிவம் இ)வண்ணம் ஈ) சுவை .
3. கண்டேன் நண்பனை - தொடர் வகையை எழுது.
அ) உம்மைத் தொடர் ஆ) எழுவாய்த்தொடர் இ) வினைத்தொடர் ஈ) வேற்றுமைத் தொடர்.
4. சலசலத்தது ( சொல்வகையை எழுதுக )
அ) இரட்டைக்கிளவி ஆ) அடுக்குத்தொடர் இ) உணர்ச்சித்தொடர் ஈ)உரிச்சொல்தொடர் .
5. ஆலத்து மேல குவளை குளத்துல
வாலின் நெடிய குரங்கு ----( பொருள்கோள் வகை )
அ ) கொண்டு கூட்டுப்பொருள்கொள்
ஆ) நிரல் நிறைப்பொருள்கொள்
இ) ஆற்றுநீர்ப்பொருள்கோள்
ஈ) மொழிமாற்றுப்பொருள்கொள்
.
6. இலக்கணக்குறிப்புத் தருக ( எவையேனும் மூன்று மட்டும் ) 3*1 = 3.
1. பலகை
அ) பொதுமொழி ஆ) தனிமொழி இ) தொடர்மொழி ஈ)பகுபதம் .
2. இங்கு பேருந்து வருமா ?
அ ) ஏவல் வினா. ஆ) அறியா வினா. இ) அறிவினா
ஈ) ஐய வினா .
3. நிலமும் பொழுதும்
அ ) உரிப்பொருள் ஆ) கருப்பொருள் இ) முதற்பொருள்
ஈ) அடிப்படைப்பொருள்.
4.அலைகடல்
அ ) பண்புத்தொகை ஆ) வினைத்தொகை இ) பெயரெச்சம்
ஈ) குறிப்பு வினைமுற்று.
5. கத்தும் குயிலோசை - சற்றே வந்து
கதிர் படவேணும்..
அ ) காலவழு ஆ) பால்வழு இ) திணைவழு ஈ) மரபு வழுவமைதி .
7. பின்வரும் கோடிட்ட இடங்களை நிரப்புக. 2*1 = 2.
1. பொருளல் லவரைப் ------------------ செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்.
அ) பொருளாகச் ஆ) மருளாகச் இ) இருளாகச்
ஈ) தெளிவாகச்
2. --------------------------- பாடற் கியைபின்றேல் : கண் என்னாம்
காண்ணோட்டம் இல்லாத கண்.
அ ) மண்ணென்னாம் ஆ) எண்ணென்னாம்
இ) புண்ணென்னாம் ஈ) பண்ணென்னாம்
3. அருமை உடைத்தன் றசாவாமை வேண்டும்
பெருமை ---------- தரும்.
அ) பயிற்சி ஆ) உயர்ச்சி இ)முயற்சி ஈ) சுழற்சி
4. குற்றம் இலானாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் -------- உலகு .
அ)சுற்றும் ஆ) சாற்றும் இ) சாரும் ஈ) செய்யும்
பகுதி - ஆ
8)
பின்வரும் செய்யுள் பகுதியைப் படித்துப் பொருள் உணர்ந்து, தொடர்ந்து வரும் பலவுள் தெரிவு வினாக்களுக்கு
ஏற்ற விடைகளை எழுதுக. 5*1 = 5.
ஆழ நெடுந்திரை யாறு கடந்திவர் போவாரோ
வேழ நெடும்படை கண்டு நடுங்கிடும் வில்லாலோ
தோழமை என்றவர் சொல்லிய சொல்லரு சொல் லன்றோ ஏழைமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ.. ( 2317)
1. இப்பாடலின் ஆசிரியர் யார் ?
அ ) ஒளவையார் ஆ) கபிலர்
இ) இளங்கோவடிகள் ஈ)கம்பர்
2. பாடல் இடம்பெற்ற நூல் எது ?
அ) நாலடியார் ஆ)நன்னெறி இ)கம்பராமாயணம் ஈ)நறுந்தொகை
3. பாடல் யார் கூற்றாக அமைந்துள்ளது ?
அ)அனுமன் ஆ) குகன் இ)இராமன் ஈ)சீதை
4. ஆழ நெடுந்திரை - என்று அழைக்கப்படும் நதி எது?
அ)கங்கை ஆ) யமுனா இ) காவேரி ஈ) சரஸ்வதி
5. தோழமை என்று அழைத்தவன் யார்? யாரை ?
அ) இராமன் - இலக்குவன்
ஆ)பரதன் - இராமன் இ)ஹனுமான -சீதை ஈ)இராமன் -குகன்.
10 ) பின்வரும் செய்யுள் வினாக்களில் இரண்டனுக்கு மட்டும் விடையளி - 3 * 3 = 9.
1. முருகன் செங்கீரை ஆடி அருளும் அழகினைக் குமரகுருபரர் எவ்வாறு பாடியுள்ளார் ?
2. தமிழும் - கடலும் ஒன்றாகும் வகையினைச் சந்தக்கவிமணி
தமிழழகனார் எவ்வாறு கூறுகிறார் ?
3. கம்பர் காட்டும் சரயு நதி பாயும் காட்சி எதனுடன் ஒப்பிடப்படுகிறது என்பது பற்றி எழுது ?
4. கல்வியின் சிறப்புப் பற்றி நீதிவெண்பா கூறுவது யாது ?
11)
எவையேனும் மூன்று உரைநடை வினாக்களுக்கு மட்டும் விடையளி - 3 * 5 =15.
1. தேவநேயப்பாவாணர் பட்டியலிடும் இலைகளின் பெயர்கள் மற்றும் கிளை வகைப் பெயர்களை எழுதுக.
2. காற்றினால் நாம் அடையும் நன்மைகள் குறித்து விவரி ?
3. இலக்கியங்கள் காட்டும் விருந்து போற்றும் பண்பு பற்றி எழுதுக.
4. மின்னணுப் புரட்சியால் ஏற்படும் நன்மைகள் குறித்து எழுதுக .
5. மயிலாட்டம் , பொய்க்கால் குதிரையாட்டம் பற்றிய செய்திகளை எழுது ?
12 )
பின்வரும் துணைப்பாடத்தலைப்பிற்கு ஏற்ற கருத்துகளைக் கதை வடிவில் ஒன்றிற்கு மட்டும் விடை எழுதுக. ( 10 ).
1 )
விண்ணைத்தாண்டிய நம்பிக்கை - உணர்த்தும் அறிவியல் உண்மையை எழுதுக.
2 )
பாய்ச்சல் - வழியாக அழகு கதாபாத்திரம் நமக்கு உணத்தும் இயல்பான பண்பு என்ன ?
3 )
தற்கால உரைநடை இலக்கியங்களில் பயன்படுத்தப்படும் அணிகளின் நலன்கள் பற்றி விளக்கி வரைக.
13 ) படத்தினைப் பார்த்து வருணித்து எழுதுக . 1 * 3 =3.
14. ஏதேனும் ஒரு கடிதத்திற்கு விடை தருக. 1 *8= 8. அ ) காணாமல்போன மிதி வண்டியைக் கண்டுபிடித்துத் தரவேண்டி உங்கள் பகுதியின்
காவல் நிலையத்தின் ஆய்வாளருக்குக் கடிதம் எழுதுக.
ஆ )
அறிவியல் தமிழ் மன்றம் நடத்திய பேச்சுப்போட்டியில் முதற் பரிசு பெற்றது குறித்து வெளியூரில் வசிக்கிக்கும் உனது நண்பனுக்கு கடிதம் வரைக.
இ ) நீங்கள் வசதிக்கும் பகுதிக்கு மருத்துவமனை அமைத்துத்தர வேண்டி நூலக சுகாதாரத்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதுக.
( கடிதம் எது ஆயினும் உனது முகவரி: வடிவழகன் / வடிவழகி , கதவு எண் : 27, பாரதியார் யார் தெரு , கபிலர் நகர் , திருச்சிராப்பள்ளி -2 எனக்கொள்க. )
15. பின் வருவனவற்றுள் ஏதேனும் ஒரு பகுதியில் உள்ள
குறிப்புகளைக்கொண்டு கட்டுரை வரைக ( 6 ).
1) முன்னுரை - தொலைக்காட்சி - கலை நிகழ்ச்சிகள் - கல்வி நிகழ்ச்சிகள் - விளையாட்டு - பொழுதுபோக்கு - முடிவுரை.
2) முன்னுரை - பருவநிலை மாற்றம் - புவிவெப்பமாதல் இயற்கைப்பேரிடர்கள் - நில நடுக்கம் -குறையும் மழை - வாழ்வின் ஆதாரம் - முடிவுரை .
3) முன்னுரை - நான் விரும்பும் கவிஞர் - - நூலின் சிறப்பு - கவிதை அழகு - எழுதிய நூல்கள் - கலை பண்பாடு - வாழ்வின் வழிகாட்டி - முடிவுரை .
வாழ்க வளமுடன் ..! PONANBu2022.
தமிழாசிரியர் :
அன்புச்செல்வன் பழ.
|
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment