மெய் எழுத்துகள் -18.

 

மெய் எழுத்துகள் -18.


மொழி இயங்குவதற்குக் காரணமாக இருக்கும் எழுத்துகள்.

·      வன்மையான ஓசையுடன் ஒலிப்பன.

வல்லினம்: 6.

க், ச், ட், த் ,ப், ற்.

 





·      மென்மையான ஓசையுடன் ஒலிப்பன.


மெல்லினம்: 6.


ங், ஞ், ண், ந், ம், ன்.



அங்ஙனம்  -  இங்ஙனம் 

மஞ்சள்        -   பஞ்சம்

திண்ணை -   மண்

பந்து             -   தந்தை

 பம்பரம்       -  சாம்பார்

அன்னை     -  அன்னம்



·      இடைப்பட்ட ஓசையுடன் 

    அதாவது, 

வன்மையான ஓசையும், மென்மையான ஓசையும் இன்றி , இடைப்பட்ட ஓசையுடன் ஒலிப்பவை.

இடையினம்: 6.

ய், ர் , ல் , வ் , ழ் ,ள்.


ஐயா         -  கவலையா..?

இரவு         -  பரவு

யாரது..?    -  பாரதியார்

இலை        -  தலை

அல்வா..?  -  அல்லவா..!

புகல்         -   அகல்

கவலை    -  குடவோலை

கள்வன்    -  உள்ளவன்

புகழ்ச்சி    -  இகழ்ச்சி

வெள்ளி    -  வெள்ளம்

திகழொளி - புகழொளி






வல்லின எழுத்துகள் . 

பயிற்ச்சி  முயற்ச்சி 

அதற்க்குள்/ இதற்க்குள்

 இவ்வாறு ஒரு சொல்லில் இரண்டு வல்லின மெய் எழுத்துகள் கள்  சேர்ந்து சொற்கள் அமையாது. 

அப்படி எழுதுதல் தவறாகும் . 


இவைகள் முறையே,

பயிற்சிமுயற்சி , அதற்குள்/ இதற்குள் என்றே அமையும். 

அன்புச்செல்வன் பழ.

தலைவர் 

சேயோன் செந்தமிழ் மன்றம்.

Comments

Popular posts from this blog

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...2025

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )