ஒன்பதாம் வகுப்பு - இயல் -1.
ஒன்பதாம் வகுப்பு - இயல் -1.
இலக்கணம்: நிரப்புக.
1.சொற்றொடர் எழுவதற்கு அடிப்படையாக அமைந்த பெயர்ச்சொல்லையே
எழுவாய் என்கிறோம்.
2. ஒரு தொடரில் பயன் நிலைத்து இருக்கும் இடத்தைப் பயனிலை என்கிறோம்.
3. ஒரு வாக்கியத்தில் பயனிலை மட்டும் நின்று ( எழுவாய் வெளிப்படையாக அமையாமல் ) பொருளை உணர்த்தும் எனில், தோன்றா எழுவாய் எனப்படும்.
3. தொடரில் வினைமுற்று பயனிலையாக வந்தால் , அது வினைப்பயனிலை எனப்படும்.
4. சொற்றொடரில் பெயர்ச்சொல்லானது பயனிலையாக அமையும் எனில் , அது பெயர்ப்பயனிலை எனப்படும்.
5. சொற்றொடரில் எழுவாய் , பயனிலை , செயப்படுபொருள் , எனும் வரிசையில் அமைய வேண்டும் என்பது இலக்கணம். எனினும் அவை முன்பின்னாக அமைந்தாலும் பொருள்குறித்தல் போதும். இது தமிழின் சொற்றொடர் அமைப்பிற்கான தனிச்சிறப்பாகும்.
6. எழுவாயாக வரும் பெயர்ச்சொல்லுக்கு அடைமொழி வந்தால் அது , பெயரடை எனப்படும்.
7. பயனிலையாக வரும் வினைச்சொல்லுக்கு அடைமொழி வந்தால் அது , வினையடை எனப்படும்.
8. எழுவாயானது ஒரு வினையைத் தானே செய்தால், அது தன்வினை எனப்படும்.
9.எழுவாயானது ஒரு வினையைப் பிறரைக்கொண்டு செய்ய வைத்தால் , அது பிறவினை எனப்படும்.
10. ஒரு செயலைச் செய்பவரை முதன்மைப்படுத்தும் வினை செய்வினை எனப்படும்.
11. செயப்படுபொருளை முதன்மைப்படுத்தும் வினை செயப்பாட்டுவினை எனப்படும்.
12. ' படு' எனும் துணைவினைச்சொல் செயப்பாட்டுவினை செயப்பாட்டு வினைத்தொடரில் சேர்ந்து விடுகிறது.
சான்று தருக:
1. எழுவாய் ( பெயர்ச்சொல் )
கந்தன் வந்தான் .
2. பயனிலை ( வினைமுற்று )
பாரதியார் எழுதினார்.
3.தோன்றா எழுவாய் ( முன்னிலைப்பெயர்)
( நீ )நன்றாகப்படி
( நீ ) படித்தாய்
( நீங்கள் ) வந்தீர்கள்
4. வினைப்பயனிலை
திருவள்ளுவர் எழுதினார் .
5. நல்ல பையன் பேசினான் . ( பெயரடை )
6. வண்டி விரைந்து வந்தது . ( வினையடை )
7. உணவு உண்டான். ( தன்வினை )
8. உணவு உண்பித்தான். ( பிறவினை )
9. அம்மா தோசை சுட்டாள் . ( செய்வினை )
10. தோசை அம்மாவாள் சூட்டப்பட்டது . ( செயப்பாட்டுவினை )
வாழ்க வளமுடன் ..! வாழ்க வையகம் ..!
ponanbu - JUNE2023.
Comments
Post a Comment