கோலப்பெருமாள்       செட்டி  வைணவ  நடுவண்  மேனிலைப்பள்ளி ,

 எண்-: 815 ,    கோலப்பெருமாள் பள்ளித்தெரு  ,   சென்னை  - 600106.

 வகுப்பு :    எட்டாம்                      தமிழ்த்தேர்வு                             மதிப்பெண் : 40.


பயிற்சித்தாள் 


நாள் :   -----------------------                                                      கிழமை :  -------------------------


அ. நிரப்புக                                                                    மதிப்பெண்கள்  -   4.

1. வினைமுற்று  ---------- வகைப்படும் .

     

2. ஏவல் -----------  ஒருமை , பன்மை     ஆகிய இருவகைகளில் வரும்.

    

3.பொருள்முடிவு பெறாத எச்சவினை ,  பெயரைக்கொண்டு  முடிந்தால்  அது, ------------.  

         

 4. ஒரு வினைமுற்று , எச்சப்பொருளைத் தந்து மற்றொரு  வினைமுற்றைக்கொண்டு முடிந்தால்  அது,----------- ஆகும்.


5. காலத்தையும் , செயலையும் வெளிப்படையாகத்  தெரியுமாறு காட்டும் வினையெச்சம்  ----------------------. 


6. ---------------- வினைமுற்று  முன்னிலையில் மட்டுமே  வரும்.


ஆ. சான்றுதருக:                                                                மதிப்பெண்கள் - 3.

1.  வினைமுற்று: 


2. குறிப்புப் பெயரெச்சம் :


3.வினையெச்சம்:


4. பெயரெச்சம்: 


5. தெரிநிலைப்பெயரெச்சம்: 


6. வியங்கோள் வினைமுற்று :


இ . நகவளைவில் குறித்தவாறு செய்க.          மதிப்பெண்கள்  -   3.

1.பாடுகின்ற பாடல்   ( எதிர் காலப்பெயரெச்சம்  ஆக்குக  )


2.மெல்ல  நடந்தான்  (  எவ்வகை எச்சம் என எழுது )


3.  வாழ்க..!    வாழ்க..!  ( எவ்வகை  வியங்கோள்வினைமுற்று   என்று எழுதுக.)


 4. அவன் பொன்னன் , எவன் ஆதிரையான்   (   வினைமுற்றின் வகை யாது )


5. கடைக்குப் போனான் ,  பாடம் படித்தான்   ( ஏவல்வினைமுற்று ஆக்குக )


6. விழுந்து   எழுந்தான் (  முற்றெச்சம்  ஆகுக  )


  ஈ. செய்யுள் பாடல்  வினா விடை:                         மதிப்பெண்கள் - 5

காலை மாலை  உலாவிநிதம் 

        காற்று வாங்கி வருவோரின் 

காலைத் தொட்டுக்கும்பிட்டு 

        காலன்  ஓடிப்போவானே....! 

கூழையே நீ குடித்தாலும் 

        குளித்த பிறகு குடியப்பா 

ஏழையே நீ ஆனாலும் 

        இரவில் நன்றாய்  உறங்கப்பா....! 


    1.எப்போது நடைப்பயிற்சி  செய்ய வேண்டும்  ?


    2.  காலன்  என்ன செய்வான் ?


    3. ஏழையாக இருந்தாலும்  எதனைச் செய்ய வேண்டும்.?


      4.  பாடல் இடம்பெற்ற நூல் எது ?


   5.  வருமுன் காப்போம் பாடலின் ஆசிரியர்  யார்..?

 

 உ . செய்யுள்   வினா விடை:                                             மதிப்பெண் - 5


1. உள்ளத்தின்  நோய்தீர்க்கும்  மூன்று  மருந்துகள் எவை ?

2. அதிகமாக உணவு உண்டால்   என்னவாகும் ?

 3. ஓடைநீரானது    யார் வெட்கப்படும்படியாக   ஓடுகின்றது?


4. ,  மக்களின் பண்புகளை  அவரவர் தோற்றத்தால் 

    அல்லாமல் ------------ வகையால் உணர்ந்து கொள்ள வேண்டும் .


5. விலங்கொடு  மக்கள் அனையர்  ------------------

    கற்றாரோடு  ஏனை யவர்.

    

ஊ. உரைநடை பத்தி வினா விடை:                                 மதிப்பெண் - 5.

 அருந்தும் உணவே  அருமருந்தென  அறிந்தவர்  நம் தமிழர். தமிழர்கள் உடல் பற்றிய அறிவையும்   ,  மருத்துவம்  பற்றிய விழிப்புணர்வையும்  பெற்றிருந்தனர். உலகில் பல்வேறு  மருத்துவ முறைகள் இருந்தாலும்  தமெக்கென மரபு சார்ந்த  மருத்துவ முறைகளை  உருவாக்கிப்  பின்பற்றி வந்தவர்கள்  தமிழர்கள் .  நாம் நோய்  வராமல் நம்மைப்  பாதுகாத்துக்கொள்வதே  சிறந்ததாகும் .


1. நாம் உண்ணும் உணவே  எதுவாக உள்ளது ?


2. நோய்  வந்தபின் மருத்துவமனை  செல்வதைவிடச் சிறந்தது 

 எது ?


 3.  உடல் நலம் காக்க  எத்தனை  வகையான  பயிற்சிகளை  நாம்  செய்ய  வேண்டும் ?


4.  உலகில் நோய்  நீக்க எவை  உள்ளன  ?


5.  மருந்து பற்றி நன்கு  அறிந்தோர் யார் ?

 


எ.  உரைநடை     வினா- விடைகள்                        மதிப்பெண்கள் -  8.


1. நோய்கள்  பெருக்கக்காரணம் ------------------ ஆகும். 


2. சித்தர்களின்  மருத்துவத்தின்  தனிச் சிறப்பு என்ன ?


3. மருந்தாகப் பயன்பட்டவை எவை.?


4. ஆங்கில மருத்துவத்தினால்    மனிதனுக்கு ஏற்படும் விளைவு 

என்ன ? 

 

5. நமது உடலுக்குச் சிறந்த    உடற்பயிற்சி எது ?


6. உங்களின் நகரங்களில் அமைதியான -------------- எதுவுமில்லை .


7. எங்கள்  மக்கள் இந்தப்பூமியை எப்பொழுதும்  ------------------- இல்லை .


8.  நாங்கள் வாழும் நிலமானது --------------- மதிக்கக்கூடிய 

ஒன்றாகும் . 


ஏ.    துணைப்பாட   வினா    விடைகள் :                      மதிப்பெண் --7.


1.காடர்கள் என்போர் யார் ?


2.  விழுந்து  கிடந்த -----------  அடியில் ஒளிந்து கொண்டது  கூரன் .


3.  ஒவ்வொரு நாளும் அச்சத்திலேயே வாழ்ந்து  வருபவர்    யார் ? 


4.  --------------    பதுங்கி இருந்த இடத்தில்  முகர்ந்து  பார்த்த போது ,

       புனுகுப்பூனையின்   நாற்றமே  அடித்தது. 


5.  --------------- செய்தவர்கள்  வாழ்நாள் முழுதும்                                               பயத்துடன் வாழ்வர்.

6. கதை மூலமாக நாம்  உணரும்  நீதி  என்ன ?


7. வெட்டுக்கிளியும்  சருகுமானும் என்பது   -------------------------------    தங்களின் பேரன் பேத்திகளுக்குச் சொல்லிவந்த  கதையாகும்.   

   

                 வாழ்க   வளமுடன் ..!                      வாழ்க  வையகம் ..!!


தமிழன் என்று சொல்லடா....!!         தலை நிமிர்ந்து நில்லடா..!! 

அன்புடன் 

உங்கள் அன்பின் அன்பன்...!
 அன்புச்செல்வன்  பழ .
9444892969


ponanbu



Comments

Popular posts from this blog

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...2025

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )