Posts

Showing posts from June, 2025
       உரைநடை - இயல்  - 1                                                 உரைநடையின் அணிநலன்கள் குறிப்புச் சட்டகம் முன்னுரை -இலக்கணம் - அணிநலன்  - புதிய உத்திகள் - முரண்படுமெய் உச்சநிலை -  முடிவுரை. முன்னுரை: சங்கப் புலவர்கள் இலக்கியங்களைச் செய்யுட் பாக்களாகவே அமைத்தனர். அப்பாடல்கள் அகம் புறம் என்று வகைப்படுத்தப்பட்டன. அவை தனிப்பாடல்களாகவும் தொகை நூல்களாகவும் அமைந்தன. தற்காலத்தில் உரைநடை இலக்கிய வடிவத்தில் நாவல் சிறுகதை புதுக்கவிதை எனும் \ வடிவில்  வளர்ச்சி பெற்றுள்ளது. உரைநடையின் அணிநலன்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம். இலக்கணம்: தொல்காப்பியர் தனது இலக்கண நூலில் உரைநடை பற்றியும் குறித்துள்ளார். சங்கப் பாடல்களில் உவமை அணி பயன்படுத்தப்பட்டது. பின்னர் வந்த தண்டி ஆசிரியர் உவமை உவமேயம் இரண்டிற்கும் வேற்றுமை தோன்றாதபடி பாடுதலை உருவகம் என வகைப்படுத்தினர். இலக்கியம் உயிரோட்ட...